×

சிவகாசி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை வழங்கல்

சிவகாசி, அக். 1: சிவகாசி மாநகராட்சியில் 1 மற்றும் 2வது மண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என, திருத்தங்கல் பகுதி கவுன்சிலர்கள் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் நிலுவை வழங்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் 1 மற்றும் 2வது மண்டலத்தில் தினக்கூலி அடிப்படையில் 60க்கும் மேற்பட்ட டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், இரண்டு மாதங்களுக்கு முன் சம்பளம் வழங்காததை கண்டித்து, திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

அதன்பின் சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு 86 நாட்களாக சம்பளம் வழங்காததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக திருத்தங்கல் பகுதி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், நேற்று காலை திருத்தங்கல் பகுதி கவுன்சிலர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று மாலை தூய்மை பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த சம்பளம் உடனடியாக விடுவிக்கப்பட்டது.

Tags : Sivakasi Corporation ,
× RELATED சிவகாசி மாநகராட்சி மக்கள் வரவேற்பு;...