விருதுநகர், அக். 1: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள தகவல்: ஆத்மா நிர்பார் பாரத் அபியான் தொகுப்பில் ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டில் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை பால் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டல், உள்கட்டமைப்பு, இறைச்சி பதப்படுத்துதல், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், மாட்டின மேம்பாட்டு தொழில்நுட்பம், கால்நடை இனப்பெருக்க பண்ணை அமைத்தல், கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தி ஆலை, விலங்கு கழிவுகள் மூலம் மேம்படுத்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பு தொழில்கள் தொடங்க விண்ணப்பித்து நிதியுதவி பெறலாம்.