திருவில்லிபுத்தூர், அக். 1: திருவில்லிபுத்தூரில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் 2022ம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டுக்கான ஆலோசனைக் கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி துணைத்தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் தங்கபாண்டியன், நகர்நல அலுவலர் கவிப்பிரியா, மேலாளர் பாபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதி புறத்தொடர்பு பணியாளர் சாந்தி, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரசுத்துறை அலுவலர்களும், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும், மகளிர் குழுக்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.