×

இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை: அக்.10, 13ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு

மதுரை, அக். 1: மதுரை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்.10ம் தேதி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும், அக்.13ம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றுவந்த காலாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து இன்று(அக்.1) முதல் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. 9 நாள் விடுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு, அக்.10ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு அக்.10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் உத்தரவுப்படி எண்ணும் எழுத்தும் 2ம்கட்ட பயிற்சி நடக்க உள்ளது. எனவே, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், அக்.13ம் தேதி திறக்கப்படும். அதே நேரத்தில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு முன்னர் அறிவித்தது போல், அக்.10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ