×

கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை பல்லவன் நகரை சேர்ந்தவர் சூர்யா (30). காசிமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இவரை, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போதை பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி திருமகள் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

 அரசு தரப்பு வழக்கறிஞர் சரவணன் சூர்யா கஞ்சா விற்பனை செய்தது உண்மை என்று வாதாடினார். இதையடுத்து, நீதிபதி திருமகள், ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் சூர்யாவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். அதன் பெயரில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் சூர்யாவை புழல் சிறையில் அடைத்தனர்.  

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...