சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் கூட்டத்தினை சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி, நவம்பர் 8ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் 8ம் தள கூட்ட அரங்கில் நடத்த உள்ளார்.