தூத்துக்குடி, செப். 30: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமை கழகத்தால் புதிதாக நியமனம் செய்து அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார். வடக்கு மாவட்ட அவைத்தலைவராக செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர்களாக (பொது)ராஜ்மோகன்செல்வின், (ஆதிதிராவிடர்)ஆறுமுகம், (மகளிர்)ஏஞ்சலா ஆகியோரும், பொருளாளராக சுசீ ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ, ராதாகிருஷ்ணன் ஆகியோரும், பொதுக்குழு உறு ப்பினர்களாக ஜாண் அலெக்சாண்டர், ராஜாக்கண்ணு, பீட்டர், ராமர், சிவசுப்பிரமணியன், முத்துலட்சுமி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஒன்றிய செயலாளர்களாக விளாத்திகுளம் கிழக்கு சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு அன்புராஜன், விளாத்திகுளம் மத்தி ராமசுப்பு, புதூர் கிழக்கு செல்வராஜ், புதூர் மேற்கு மும்மூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு நவநீதகண்ணன், கோவில்பட்டி மத்தி முருகேசன், கோவில்பட்டி மேற்கு ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு காசிவிஸ்வநாதன், கயத்தாறு கிழக்கு சின்னப்பாண்டியன், கயத்தாறு மத்தி கருப்பசாமி, கயத்தார் மேற்கு சுப்பிரமணியன் ஆகியோரும், கோவில்பட்டி நகர செயலாளராக கருணாநிதி, பேரூர் செயலாளர்களாக விளாத்திகுளம் வேலுச்சாமி, புதூர் மருதுபாண்டியன், எட்டயபுரம் பாரதிகணேசன், கடம்பூர் பாலகுமார், கயத்தாறு சுரேஷ்கண்ணன், கழுகுமலை கிருஷ்ணகுமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதேபோல் தூத்துக்குடி மாநகர செயலாளராக ஆனந்தசேகரன், அவைத்தலைவராக ஏசுதாஸ், துணை செயலாளர்களாக முருகேசன், கனகராஜ், பிரமிளா ஆகியோரும், பொருளாளராக அனந்தையா, பகுதி செயலாளர்களாக போல்பேட்டை ஜெயக்குமார், திரேஸ்புரம் நிர்மல்ராஜ், சண்முகபுரம் சுரேஷ்குமார், அண்ணாநகர்- ரவீந்திரன், பிரையண்ட் நகர் ராமகிருஷ்ணன், முத்தையாபுரம் மேகநாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.