×

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் அக். 2ல் கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், செப்.30: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற 2ம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.  கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010- மறுகணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம்,  சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த மற்றும் பண்ணை சாராத தொழில்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அந்த ஊராட்சியில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் தவறாமல் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Gandhi Jayanti ,Gram Sabha ,
× RELATED செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்