சேலம், செப்.30: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோதா விடுத்துள்ள அறிக்கை; சேலம் மாநகரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துதற்கு பிரிவு 41 தமிழ்நாடு மாநகர கால்துறை சட்டம் 1888ன்படி சேலம் மாநகர காவல்ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்தவேண்டும். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்த பட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.