தேன்கனிக்கோட்டை, செப்.30: கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பொன்னுமணி, அலுவல் துணை தாசில்தார் சுரேந்திரன் மற்றும் ஆர்ஐ கிருஷ்ணப்பா மற்றும் குழுவினர், நேற்று காலை அஞ்செட்டி சாலையில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தினர். லாரியை நிறுத்திய டிரைவர்கள் கீழே இறங்கி தப்பியோடி விட்டனர். இதையடுத்து அதிகாரிகள் லாரியை சோதனையிட்ட போது, அதில் அனுமதியின்றி கிரானைட் கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது.