காங்கயம்,செப்.30: காங்கயம் அருகே ஒரே இரவில் 7 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நஞ்சப்பகவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (77). விவசாயி. நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் வீட்டின் பின் பக்கம் உள்ள அறையில் தூங்கினார். முன்பக்கமாக மர்ம நபர் வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.4 ஆயிரத்தை திருடி சென்றார். இதே பகுதியைச் சேர்ந்த சாமியாத்தாள் (52) வீட்டிலும் புகுந்த மர்ம நபர் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றார். மேலும் மணி (52) என்பவரின் வீட்டில் ரூ.7 ஆயிரமும், சுப்பிரமணி (65) வீட்டில் ரூ.3 ஆயிரமும் திருடு போனது.