திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி ஆலோசனை கூட்டம்

திருப்பூர்,செப்.30: திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கி பேசினார். இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சிவசங்கரி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் மற்றும் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியம், பொருளாளர் நட்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதன் பின்னர் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா நிருபர்களிடம் கூறியதாவது: மாநில இளைஞரணி சார்பில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்திற்கு அதிகமான வங்கி கடன் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் உதவிகள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் தொழில் பெருகும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: