×

இ.கம்யூ, விசிக நிர்வாகிகள் கூட்டம்

திருப்பூர்,செப்.30: இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் மனித சங்கிலி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருப்பூர் மாநகரம், அவினாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய இடங்களில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த மனித சங்கிலி இயக்கத்தில் அனைவரும் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்,  புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், புறநகர் மாவட்ட பொருளாளர் பழனிசாமி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி,  தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால், விடுதலை சிறுத்தை கட்சிகளின் திருப்பூர்  கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்  தமிழ் வேந்தன், திருப்பூர் தெற்கு பொறுப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

Tags :
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...