தேவதானப்பட்டி, செப். 30: தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே, ஜெயமங்கலத்தில் உள்ள காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா (51), விவசாய கூலித்தொழிலாளி. இவர், ஜெயமங்கலம் வாய்க்கால் பாலம் அருகே, முப்பிடாரி அம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள வயலுக்கு நேற்று கூலி வேலைக்கு சென்றார். கருப்பையா மற்றும் கூலியாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கருப்பையா அருகில் இருந்த மரத்தை தொட்டுள்ளார்.