சுகாதாரமின்றி சூரிய தீர்த்த குளம்

திருவாடானை சினேக வல்லியம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த சிவாலயத்தில் உள்ள வடகிழக்கு பகுதியில் சூரியதீர்த்த குளம் உள்ளது. சூரிய பகவான் இந்த சூரிய தீர்த்த குளத்தில் உள்ள தீர்த்தத்தை எடுத்துச் சென்று இவ்வாலயத்தில் ரெத்தினங்களால் ஆன லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஆடானை புராணம் கூறுகிறது. மேலும் இந்த சிவாலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோவிலின் வளாக வடகிழக்கு பகுதியில் இருக்கும் சூரிய தீர்த்த குளத்தில் உள்ள தீர்த்தத்தை எடுத்து தலையில் தெளித்தால் சகல தோஷங்களும் விலகி நன்மை ஏற்படும் என்ற ஐதீகத்தால் இன்றளவும் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த சூரிய தீர்த்த குளம் முட்புதர்கள் மண்டி கழிவுநீர் தேங்கியது போல் சுகாதாரமின்றி பயன்பாடற்று உள்ளது. இந்த சூரிய தீர்த்த குளத்தை சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: