×

மதுப்பாட்டில்கள் பறிமுதல்

மதுரை மாவட்டம், பேரையூர் பகுதியில் பேரையூர் டிஎஸ்பி இலக்கியா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகட்டளையில் செல்வமீனா(31), குருவுத்தாய்(31), அழகுரெட்டியபட்டியில் வனிதா(45), எஸ்.சென்னம்பட்டியில் ராசு(45), ஆகிய 4 பேரும் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களிடமிருந்த 62 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு