திண்டுக்கல், செப். 30:திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் கடந்த செப்.24ம் தேதி பாஜக பிரமுகர் செந்தில்பால்ராஜ்க்கு சொந்தமான குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 5 டூவீல்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றனர். இதில் வாகனங்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதுதொடர்பாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ஒருவரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வந்தனர்.