திண்டுக்கல், செப். 30: பழநி உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள சண்முகாநதி பகுதியை சேர்ந்தவர் சுல்தான் மைதீன் (32). இவர் பள்ளி மாணவி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடந்த 2019ம் ஆண்டு பழநி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ேபாலீசார் சுல்தான் மைதீனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.