காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

காஞ்சிபுரம், செப். 29: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். பெரும்புதூர் எம்.பி, டி.ஆர்.பாலு முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள படித்த உள்ளுர் இளைஞர்களுக்கு 20 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையினை தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

3 மாதத்திற்கு ஒரு முறை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. மேலும், படித்து வேலையற்ற உள்ளுர் இளைஞர்களுக்கு இம்முகாம்கள் மூலம் தங்கள் வேலைவாய்ப்பை உறுதிபடுத்தி கொள்ள முடியும். இதற்கு, தொழில் நிறுவனங்களும் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அற்ற 1,500 இளைஞர்கள் வேலை வாய்ப்பு வேண்டி மனு அளித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், செல்வப்பெருந்தகை, எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி, எஸ்.எஸ்.பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: