×

விராலிமலை அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற வாலிபர் கைது

விராலிமலை, செப்.29: விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லஞ்ச மேடு பகுதியில் மதுபான பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு கள்ளசந்தையில் சிலர் விற்று வருவதாக விராலிமலை போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அப்பகுதிகளில் விராலிமலை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே கடை திறக்கும் நேரத்திற்கு முன்பு அரசு மதுபான பாட்டில்களை பதிக்கி விற்றுக் கொண்டிருந்த மேடு காட்டு பட்டியை சேர்ந்த கிருஷ்ணன்(35) என்பவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 7 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா