பொன்னமராவதி அருகே புதிய தார்சாலை 3 மாதத்திலேயே சேதம் மீண்டும் சீரமைக்க கோரிக்கை

பொன்னமராவதி, செப்.29: பொன்னமராவதி அருகே சாலை அமைக்கப்பட்ட சில மாதத்தில் பெயர்ந்த சாலை உடனே சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அருகே சங்கம்பட்டியிலிருந்து ஈச்சம்பட்டிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. சாலை போடப்பட்டு மூன்று மாதம் கூட முடிவடையாத நிலையில், தற்போது அந்த சாலையில் அரை அடி அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு ஆங்காங்கே வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற தார் மற்றும் ஜல்லி கற்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டதால், மூன்றே மாதத்தில் சிதிலமடைந்து வருகிறது. சிறுவர்கள் சாலையில் உள்ள கலவையை கையில் அள்ளும் அளவிற்கு உள்ளது. எனவே இச்சாலையை மறுசீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: