புதுக்கோட்டை மாவட்ட சமூக இயல் வல்லுநர் பணியிடத்திற்கு அக்.5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் சிறை கண்காணிப்பாளர் தகவல்

புதுக்கோட்டை, செப்.29:புதுக்கோட்டை பார்ஸ்டல்பள்ளி மற்றும் மாவட்டசிறையில் புதிதாக ரூ.15 ஆயிரம் மதிப்பூதியத்தின் அடிப்படையில் சமூக இயல் வல்லுநர் பணியிடம் நிரப்பம் செய்வதற்காக தகுதி உள்ள நபர்களின் விருப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றும் அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, சிறைகண்காணிப்பாளர், பார்ஸ்டல்பள்ளி மற்றும் மாவட்டசிறை, புதுக்கோட்டை 622 001, தபால் பெட்டி எண் 27, தொலைபேசி எண் 04322 222220 ஆகும்.

பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி) 32 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி) 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் வகுப்பினர் (எஸ்.சி) 35 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் (எஸ்.டி) 35 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் அருந்ததியினர் 35 வயதுக்குள்ளும், இதில் மாற்றுதிறனாளிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து வகுப்பினர்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். சம்பளம் மதிப்பூதியம் மட்டும், மாதம் ரூ.15 ஆயிரம் ஆகும். விண்ணப்பங்கள் 5.10.2022 ம் தேதி மாலை 05.45 மணிக்கு முன் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: