×

பாவாலி, சிவஞானபுரம் ஊராட்சியில் 3 டிரான்ஸ்பார்மர்கள் திறப்பு

விருதுநகர், செப். 29: விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட பாவாலி ஊராட்சியில் சந்திரகிரிபுரம், சிவஞானபுரம் ஊராட்சியில் கருப்பசாமி நகர் பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக குடியிருப்புகள், தொழிற்சாலைகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தன. அதை சரிசெய்யும் வகையில் ரூ.14.60 லட்சம் மதிப்பிலான 3 டிரான்பார்மர்களை நேற்று எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் துவக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகர், செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் சங்கரானந்த், சிவக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Bawali ,Sivagnanapuram ,
× RELATED சிறுதானிய புட்டுகள், காய்கறி தோசைகள்...