×

மழைநீர் சேகரிப்பு திட்டம் கூடுதல் செயலாளர் ஆய்வு

விருதுநகர்,செப்.29: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஜெயா தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக ஜல் சக்தி அபியான், ஜல் சக்தி கேந்திரா மற்றும் மழை நீரை சேகரிக்க நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான விளக்க கட்சிகள் எடுத்துரைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு பணிகளான தடுப்பணை கட்டும் பணி, குடிமராமத்து செய்யப்பட்ட ஊரணிகள், மழைநீர் உறிஞ்சும் அகழிகள், நீரினை மறுசுழற்சி செய்யும் வடிவமைப்புகள் ஆகியவற்றை கூடுதல் செயலாளர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வுகளில் ஜல்சக்தி அபியான் திட்ட தொழில் நுட்ப அலுவலர் ஜமீர் பகவான், செயற்பொறியாளர் சக்திமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ