பெரியகுளம், செப். 29: பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள க.விலக்கு உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நாளை 30.09. 2022 அன்று காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை பிராது காரன்பட்டி, பிஸ்மி நகர், க.விலக்கு, குன்னூர், அரைப்படி தேவன் பட்டி, அன்னை இந்திரா நகர், குன்னூர், ரங்கசமுத்திரம், முத்தனம் பட்டி நாச்சியார்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.