×

கழுகுமலையில் பரிதாபம் தொழிலாளி தீயில் கருகி சாவு

கழுகுமலை, செப்.29:  கழுகுமலை அருகேயுள்ள தெற்கு அச்சம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மருதையா மகன் பாக்கியசாமி (55). இவர் கழுகுமலை - பழங்கோட்டை சாலையில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கடந்த 20 ஆண்டாக வேலை பார்த்து வந்தார். தீப்பெட்டி ஆலையில் சேகரிக்கப்படும் மருந்து கழிவு குச்சிகளை கோயிலுக்கு சொந்தமான மாட்டு தாவணி என்ற இடத்தில் கொட்டப்பட்டு தீயிட்டு அழிப்பது வழக்கம். அதன்படி கடந்த 18ம் தேதி மருந்து கழிவு குச்சிகளை குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று தீயில் கொட்டினார். பின்னர் மீதமுள்ள கழிவு குச்சிகளை 2வது முறையாக கொண்டு சென்று எரிந்து கொண்டிருந்த கழிவுகள் மீது கொட்டினார். அப்போது ஏற்பட்ட புகை மூட்டம் மற்றும் வெப்பம் காரணமாக பாக்கியசாமி உடலில் வெப்பம் தாக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் கழுகுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 24ம் தேதி வரை சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kalgukumalai ,
× RELATED கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி