×

தொழிலாளியை மிரட்டியவர் கைது

தூத்துக்குடி, செப்.29: தூத்துக்குடி சமீர்வியாஸ் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (41). தொழிலாளியான இவருக்கும், தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திராநகரை சேர்ந்த ஸ்டாலின் (22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் மீனவர் காலனி பகுதியில் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஸ்டாலின் அவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் எஸ்ஐ சிவக்குமார் வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு