பரமக்குடி,செப்.29: பரமக்குடி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு யூரியா வினியோகத்தை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 மீ.மீ மழை அளவு பெறப்பட்டுள்ள நிலையில், சம்பா பருவத்திற்கான விதைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுநாள் வரை 31,036 ஏக்கர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகை பயிர்கள் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு செப்.2022 மாதத்திற்கு மட்டும் வினியோகம் செய்திட திட்டமிடப்பட்டிருந்த 4,695 மெ.டன் யூரியாவில் இதுவரை 2,520 மெ.டன் யூரியா மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.