ஆர்.எஸ்.மங்கலம்,செப்.29: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான வாராந்திர ஆய்வு கூட்டம் மண்டல அலுவலர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பிடிஒகள் மலைராஜன்,முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நிலுவை பணிகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டது. பிடிஒ மலைராஜன் பேசுகையில், வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்களை நடத்திட வேண்டும்.