மதுரை, ெசப். 29: ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரை எஸ்டிடியூ தொழிற்சங்க வடக்கு மாவட்டம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்டத்தலைவர் நிசார் தலைமை வகித்தார். செயலாளர் மன்சூர் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் முஜிபுர் ரகுமான், பாவாதீன் ஜமால்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்டத்தலைவர் பிலால்தீன், துணைத்தலைவர் ஜாபர் சுல்தான், ஆகியோர் கலந்து கொண்டனர்.