×

கடற்கரையில் பெண் சடலம்

மரக்காணம், செப். 29: மரக்காணம் அருகே பள்ளத்தம்மன் கோயில் பகுதியில் நேற்று காலை அடையாளம்  தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் கடலில் இருந்து  கரை ஒதுங்கி கிடந்தது. கரை ஒதுங்கிய பெண்ணின் உடலில் பாவாடை, ஜாக்கெட் மட்டுமே அணிந்திருந்த  நிலையில் அலங்கோலமாக கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மரக்காணம்  காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து மரக்காணம் போலீசார் சம்பவ  இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி, அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

எனினும் கரை ஒதுங்கிய பெண்ணைப் பற்றி எந்தத் தகவலும்  கிடைக்கவில்லை. இதனால் அவர் அப்பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்தது.அந்த பெண்  கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னை  காரணமாக பெண்ணை கொலை செய்துவிட்டு கடலில் வீசிவிட்டு சென்றார்களா?  என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கரை ஒதுங்கி கிடந்த  பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு