பால்கனியில் நின்றவர் போதையில் விழுந்து பலி

ஆலந்தூர், செப்.29: ஆதம்பாக்கம் பெரியார் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (43), சென்ட்ரிங் வேலைசெய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் தள்ளாடியபடி வந்து தனது வீட்டின் பால்கனியில் நின்றுள்ளார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்குப்பின் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், தகவலின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: