அம்பத்தூர்: மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு (தடம் எண்.48ஏ) மாநகர பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் மாதவரத்தில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு மாநகர பஸ் புறப்பட்டது. டிரைவர் சாய்பாலாஜி (44) பஸ்சை ஓட்டிச் சென்றார். அதில், பயணிகள், மாணவர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். வில்லிவாக்கம் அருகே வந்தபோது, மாணவர்களில் சிலர் பாட்டு பாடி ஆட்டம் போட்டனர். மாணவர்களின் இந்த செயலால் பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், கண்டக்டர், டிரைவர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களை கண்டக்டர் கண்டித்துள்ளார்.