ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி கயத்தாறு, செப். 28: கயத்தாறு அருகே சன்னது

புதுக்குடி தெற்குத்தெருவை சேர்ந்தமுருகன் மகன் உய்க்காட்டன் (22). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று காலை தனது ஆட்டோவில் விவசாய கூலி தொழிலாளர்களை அழைத்துச் சென்று கயத்தாறு அருகே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ராஜாபுதுக்குடி விலக்கு அருகே அணுகு சாலையில் வந்தபோது அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனம் மீது மோதிய ஆட்டோ, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்ட உய்க்காட்டான் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உய்க்காட்டான் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: