×

சேத்தியாத்தோப்பில் பேருந்து நிறுத்தம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும்

சேத்தியாத்தோப்பு, செப். 28: சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகே நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகே சென்னை மார்க்கம் செல்லும் பகுதியில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் நீண்ட நாட்களாக அவதியடைந்து வருகின்றனர். கனமழை மற்றும் வெயில் நேரங்களிலும் பொதுமக்களும், பயணிகளும் ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் காலை நேரங்களில் அதிகளவு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியைகள், பொதுமக்கள் கூட்டம் மிகுந்து இருக்கும். மேலும் வாரச்சந்தை நாளிலும் எண்ணற்ற கிராம மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அப்போது அவர்கள் தங்களது உடமைகளை பாதுகாக்க நிழற்குடை இல்லாததால் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இப்பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றிவிட்டு வடலூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள விசாலமான நிழற்குடையை போன்று இப்பகுதியிலும் நிழற்குடையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chetiyathop ,
× RELATED சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் 2...