×

பட்டாசு கடை மற்றும் வெடிமருந்து குடோன்களில் போலீசார் சோதனை

கடலூர், செப். 28: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கடலூர் மாவட்டத்தில் வெடிபொருள் தயாரிக்கும் இடங்கள், வெடிபொருள் குடோன்கள் மற்றும் பட்டாசு விற்பனை செய்யும் இடங்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் உத்தரவு பிறப்பித்ததன் பேரில், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் புதுச்சத்திரம் அரவிந்தன் ஃபயர் ஒர்க்ஸ் வெடிமருந்து குடோனில் சோதனை மேற்கொண்டார். சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் சேத்தியாத்தோப்பு மகாராஜா ஃபயர் ஒர்க்ஸ், வெடிமருந்து குடோனுக்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் மந்தாரக்குப்பம் வீணங்கேணி அம்மா ஃபயர் ஒர்க்ஸ்க்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். இதேபோல ரெட்டிச்சாவடி சிவனாற்புரம் கோசலா ஃபயர் ஒர்க்ஸ், சேகர் ஃபயர் ஒர்க்ஸ், மேட்டுக்குப்பம் முருகன் ஃபயர் ஒர்க்ஸ், நல்லப்பரெட்டிப்பாளையம் ஃபயர் ஒர்க்ஸ், வெடிமருந்து குடோன், அண்ணாமலை நகர் கூத்தங்கோவில் வெண்ணிலா ஃபயர் ஒர்க்ஸ், வெடிமருந்து குடோன், சிதம்பரம் முனிசிபல் குடோன், செந்தில் குடோன், மருதூர் சசிகுமார் வெடிபொருள் குடோன், பெரியகுமட்டி வெங்கடேஷ்வரா ஃபயர் ஒர்க்ஸ், விருத்தாசலம் புதுகூரைபேட்டை  அம்மன் ஃபயர் ஓர்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...