×

நிலக்கடலை கிலோ ரூ.73க்கு ஏலம் விவசாயிகள் மகிழ்ச்சி

க.பரமத்தி, செப்.28: நிலக்கடலை விலை கிலோவிற்கு ரூ.73க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, மற்றும் கரூர் ஒன்றியம் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய கிராம புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் விளையும் நிலக்கடலையை பலர் கடலையை காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர். பிறகு மீதம் உள்ள கடலையை மூட்டைகளாக கட்டி அருகேயுள்ள வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.  அங்கு நேற்று நடந்த ஏலத்தில் 400 மூட்டை எடைக்குகாக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு குறைந்த பட்சமாக ரூ.63க்கும், அதிக பட்சமாக ஒரு கிலோவிற்கு ரூ.73க்கும் ஏலம் போனது கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.3 உயர்ந்து நிலக்கடலை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது