இளையோர் திருவிழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், செப்.28: நாகப்பட்டினம் மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என துணை இயக்குநர் திருநீலகண்டன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடி வரும் வேளையில் இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்தின் லட்சியங்களையும், மதிப்புகளையும் நினைவுகூறவும், நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும், தேசியம், தேசபக்தி உள்ளிட்டவற்றை வெளிகொணரவும் நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன்பட இந்த திருவிழா நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இளையோர் திருவிழாவில் நம் பாரம்பரியம் மற்றும் மரபின் மீது பெருமை கொள்வோம் என்ற மைய கருத்தை வலியுறுத்தி போட்டிகள் நடைபெறுகிறது.

 இளம்எழுத்தாளர் போட்டி, கவிதை, இளம் கலைஞர் போட்டி, ஓவியம், கைபேசி புகைப்பட போட்டி, ஆங்கிலம் மற்றம் இந்தியில் பேச்சுப்போட்டி, கலை விழா போட்டிகள் ஆகியவை நடக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது முதல் 29 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். ஒரு போட்டியில் ஒரு நபர் மட்டுமே பங்கு கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். போட்டியில் பங்கு பெற விரும்புவோர் தொலைபேசி எண் 04365 225576 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: