விராலிமலை, செப்.28: விராலிமலை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலை கடையை கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட அமலாக்கப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திறந்து வைத்தனர். விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ராஜாளிப்பட்டியில் புதிய நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜாளிபட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தகவுண்டம் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் வந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளதாக கூறி பொதுவிநியோக திட்ட அதிகாரிகளிடம் முத்த கவுண்டம்பட்டி கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறக்க கோரி கோரிக்கை மனு அளித்திருந்தனர்.