விராலிமலை,செப்.28: விராலிமலை-கீரனூர் வழித்தடத்தில் செல்லும் அரசு பேருந்தை காலை, மாலை என இரு வேளைகளில் அதிகப்படுத்தி இயக்குமாறு பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விராலிமலையில் இருந்து கீரனூர் வழித்தடத்தில் அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பேரம்பூர், நால்ரோடு, நீர் பழனி, ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் விராலிமலையில் இருந்து கீரனூருக்கும், கீரனூரில் இருந்து விராலிமலைக்கும் பயணித்து பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை பள்ளி தொடங்கும் நேரம் மற்றும் பள்ளி முடியும் நேரத்தில் பேருந்தை அதிகப்படுத்தி இயக்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் தற்போது கோரிக்கை வலுத்துள்ளது.