தஞ்சாவூரில் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட விழா

தஞ்சாவூர், செப். 28: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் 4ம் ஆண்டு நிறைவு விழா மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 4,67,614 குடும்பத்தினர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் அறுவை சிகிச்சை பெற்ற பயனாளிகளுக்கு பரிசுகளையும் புதிதாக மருத்துவ காப்பீட்டு திட்ட உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும் சிறப்பாக செயல்பட்ட காப்பீட்டுத் திட்டப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

Related Stories: