×

முத்துப்பேட்டையில் விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கல்

முத்துப்பேட்டை,செப்.28: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தென்னை உழவர் உற்பத்தியாளர், அலையாத்தி கடல் மீனவர் உழவர் உற்பத்தியாளர்கள் சார்பில் விவசாயிகள் விழா நடைபெற்றது. இதற்கு மன்னார்குடி ஆர்டிஓ கீர்த்தனா மணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வகித்து பேசினார். முன்னதாக ஆர்டி சேவை அமைப்பின் நிறுவனர் விஜயகுமார் வரவேற்று பேசினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர் லெட்சுமி காந்தன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சண்முகம், நீடாமங்கலம் வேளாண்மை துறை அலுவலர் ராதாகிருஷ்ணன், கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் டாக்டர் கதிர் செல்வம், திருவாரூர் முன்னோடி வழங்கி மேலாளர் செந்தில், நெல் ஜெயராமன் பராம்பரிய நெல் பாதுக்காப்பு மைய நிறுவனர் ராஜீவ், முன்னோடி வங்கி மேலாளர் விஸ்வந்த் கண்ணா, கால்நடைத்துறை இணை இயக்குனர் ராமலிங்கம், கால்நடை மருத்துவர் மகேந்திரன் உட்பட பலரும் பேசினர்.அதனை தொடர்ந்து கலந்து கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல், மரக்கன்றுகள், காய்கறி விதைகள், கால்நடை பராமரிப்பு நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. இதில் சேவை அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு துறை அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

Tags : Muthupettai ,
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...