நெல்லை, செப்.27: நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மாநகராட்சியின் மாமன்ற ஒப்புதலோடு கடந்த ஏப்ரல் 1ம் ேததி சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் அரசு மற்றும் அரசு சார்பு கட்டிடங்களுக்கு 50 சதவீத வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. காலிமனைகளுக்கு ஏற்கனவே உள்ள வரியில் 100 சதவீதம் வரிசீராய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே வரி செலுத்துவோர் உடனடியாக வரிகளை செலுத்திட வேண்டும். இதுபோன்று குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றையும் செலுத்திட வேண்டும். மேலும் சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை, கட்டிடங்களை சீல் வைத்தல் போன்ற சட்டபூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.