×

பர்கூர் தாலுகா அலுவலகத்தில் நில ஆவண மேலாண்மை மையம்

கிருஷ்ணகிரி, செப்.26: பர்கூர் தாலுகா அலுவலகத்தில் ₹6.80 லட்சம் மதிப்பில் புதியதாக நிறுவப்பட்ட நில ஆவண மேலாண்மை மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவில் நில ஆவண மேலாண்மை மையத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது: பர்கூர் தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறையினரால் நிறுவனப்பட்ட நில ஆவண மேலாண்மை மையத்தில் ₹6 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நில அளவை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. நில உடமைதாரர்கள் தங்களின் நிலம் சம்மந்தமாக பட்டா, புலப்படம், சிட்டா, நகர நில அளவை பதிவேடு, அ.பதிவேடு, அரசு புறம்போக்கு ஆகிய அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், ஒரே இடத்தில் நிலம் தொடர்பான விவரங்களை நகல் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  எனவே, பொதுமக்கள் நில ஆவண மேலாண்மை மையத்தினை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், உதவி இயக்குநர் (நில அளவை) சேகரன், தாசில்தார்கள் பன்னீர்செல்வி, தெய்வநாயகி, கோட்ட நில அளவை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமையிட நில அளவையர் கோவிந்தராஜ், தலைமையிடத்து துணை தாசில்தார் பத்மா, சார் அளவையர்கள் நாகராஜன், கலா, முனியம்மாள், வெங்கடாஜலம், பண்பரசு, வளையாபதி, லீலாவதி, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Land Document Management Center ,Parkur Taluk ,Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்