×

இளையோர்கான தடகள போட்டிகள்

கிருஷ்ணகிரி, செப்.26: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி மாவட்ட இளையோர்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் மதியழகன் எம்எல்ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட இளையோர்க்கான தடகள சாம்பியன்ஷிப் 2022ம் ஆண்டுக்கான போட்டிகள் வருகிற அக்டோபர் 2ம் தேதி ஓசூர் அடுத்த மதகொண்டப்பள்ளி மாடல் பள்ளியில் நடக்கிறது. இப்போட்டியில், 14, 16, 18, மற்றும் 20 வயதுகுட்பட்ட தடகள வீரர், மற்றும் வீராங்கனைகள் கலந்துக்கொள்ளாம். இப்போட்டியில் தமிழ்நாடு தடகள சங்கத்தால் நிர்ணையக்கப்பட்ட ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடைபெறவுள்ளது.

அதன்படி வீரர், வீராங்கனைகள், 20 வயதுக்குட்பட்டவர்கள் 16.11.2002 முதல் 15.11.2004 வரை, 18 வயதுக்குட்பட்டவர்கள் 16.11.2004 முதல் 15.11.2006 வரை, 16 வயதுக்குட்பட்டவர்கள் 16.11.2006 முதல் 15.11.2008 வரை, 14 வயதுக்குட்பட்டவர்கள் 16.11.2008 முதல் 15.11.2010 வரை வயதிற்குள் இருக்க வேண்டும். இப்போட்டியில் தகுதி தேர்வு செய்யப்படுபவர்கள், அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள 36வது தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கபடும்.

இப்போட்டியில் ஒருவீரர் 2 போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டியாளர்கள் 2 ஓட்டப்போட்டியை தேர்வு செய்தால், அதில் ஒன்று 200 மீட்டர் தூரத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும். 12 வயதுக்குட்பட்டவர்கள் யாரும் பங்கேற்க அனுமதியில்லை. போட்டியில்  கலந்துகொள்ள விரும்புவோர் நுழைவு கட்டணமாக ஒரு போட்டிக்கு ₹100 செலுத்தவேண்டும். வருகிற 28ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். வயது சான்றுக்கான ஆதார் கட்டாயம் கொண்டு வேண்டும். இவ்வாறு மதியழகன் எம்எல்ஏ., தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா