குறிஞ்சிப்பாடி, செப். 27: உலக சாதனைக்காக, கடலூர் மாவட்டத்தில் அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நடுவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உலக சாதனைக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் அரசு கட்டிடங்களில் ஒரே மாதிரியான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் 1600 இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை பார்வையிட குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு கோயம்புத்தூரை சேர்ந்த நடுவர் அமித் கே சிங்கரோணி வருகை தந்தார். பூவானி குப்பம், அகரம், அம்பலவாணன் பேட்டை ஆகிய கிராமங்களில் அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார்.