×

முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர் கருத்தரங்கு அறிவிப்பு

கடலூர், செப். 27: கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு 6.10.2022 காலை 10மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. மேலும் முன்னாள் படைவீரர்கள் சுய தொழில் செய்திட ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்கில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள், சிறப்பு பயிற்சிகள் மற்றும் சலுகைகள் குறித்து விரிவுரையாற்றவுள்ளனர். எனவே தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முன்னாள் படை
வீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்,  அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களை சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கையினை மனுவாக இரு பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் வழங்கிடுமாறு மட்ட மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...