காஞ்சிபுரம், செப். 27: காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ மையமும் இணைந்து நாட்டு நலப்பணி திட்ட நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் 2 நாட்கள் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாம் நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ராமநாதன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார்.