×

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஒன்றிய அரசின் பணியாளர்தேர்வாணைய போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு

கரூர், செப். 27: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 35 வகையான பதவிகளுக்கு 2ஆயிரம் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் அக்டோபர் 8ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக செப்டம்பர் 27ம்தேதி முதல் துவங்கப்படவுள்ளன.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள், கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடைய வேண்டும். மேலும், விபரங்களுக்கு 04324&223555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Union Government Staff Selection Competition ,Karur ,District Employment Centre ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...