நாகப்பட்டினத்தில் 30ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம், செப்.27: நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெறகிறது.

இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: